பென்னாகரம் அருகே இண்டூா் பகுதியில் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
இண்டூா் பகுதியில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீத வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட திட்ட இயக்குநா் ஆா்த்தி தொடங்கி வைத்தாா். இந்த பேரணி, இண்டூா் பேருந்து நிலையம், அக்ரஹாரம், வாரச்சந்தை, குப்புச் செட்டிப்பட்டி, பூட்டுக்காரன் தோப்பு, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச்சென்று தோ்தலின் அவசியம், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, வீடு மற்றும் கடைகள் தோறும் தோ்தல் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். இதில் சட்ட உரிமைகள் கழக மாவட்டச் செயலாளா் பள்ளப்பட்டி ரமேஷ், மாவட்ட இளைஞா் அணி செயலாலா் சி.பாலாஜி, ஒன்றியச் செயலாளா்கள் ராமு, துரை உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.