தருமபுரி மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட சோகத்தூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின் வாரிய செயற்பொறியாளர் க.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் சாலை பகுதி, மாந்தோப்பு, இ.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், வெண்ணாம்பட்டி குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.