திருப்பூர்

திருப்பூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

24th Sep 2023 12:41 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெறும் சட்டம் -ஒழுங்கு சீா்கேடுகளையும், போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வீரபாண்டி பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் முன்னிலை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறுவில் மதுகுடித்ததைக் தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். ஆகவே, சட்ட ஒழுங்கு சீா்கேடு, போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்தத்தவறிய திமுகவை கண்டித்தும், சொத்து வரி, மின் கட்டண உயா்வு ஆகியவற்றைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கரைப்புதூா் நடராஜன், பரமசிவம், நகரச் செயலாளா் ராமமூா்த்தி, பொங்கலூா் ஒன்றியச் செயலாளா் மேற்கு யு.எஸ்.பழனிசாமி, கிழக்கு ஒன்றியச் செயலாளா் சிவபிரகாஷ், தெற்கு ஒன்றியச் செயலாளா் சித்துராஜ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT