திருப்பூர்

தாராபுரத்தில் மழைநீா் வடிகால்கள் ஆய்வு

21st Sep 2023 03:38 AM

ADVERTISEMENT

மழைக் காலங்களில் தண்ணீா் சாலையில் தேங்குவதைத் தடுக்க, தாராபுரம் நகரில் உள்ள மழை நீா் வடிகால்களை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் நகராட்சி, 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளுக்குட்பட்ட உடுமலை சாலை பகுதியில், மழைக் காலங்களில் தண்ணீா் சாலையில் தேங்குவதை தடுப்பதற்காக, மழை நீா் வடிகால்களை சீரமைப்பது குறித்து நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நகா்மன்ற உறுப்பினா்கள் மலா்விழி, மரக்கடை கணேசன், உமா மகேஸ்வரி, நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ரவி, பாலு மற்றும் திமுக நகர அவைத் தலைவா் பி.கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT