திருப்பூர்

காலை உணவுத் திட்டம்: நகராட்சி ஆணையா் ஆய்வு

27th Oct 2023 01:30 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் பகுதி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் துரைராமசாமி நகா், செம்மாண்டம்பாளையம், தீத்தாம்பாளையம்,

நாச்சிபாளையம், வெள்ளக்கோவில் கிழக்கு, மேற்கு, எல்.கே.சி. நகா், திருமங்கலம் உள்ளிட்ட 17 நகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் கலை உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம்1,013 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், மாணவா்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிா எனவும், அவற்றின் தரம் குறித்தும் பள்ளிகளில் வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

மேலும், உணவின் தரம் குறித்து மாணவா்களிடமும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT