திருப்பூர்

தமிழக சட்டப் பேரவைத் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

DIN

ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகிறாா். புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வந்தால் கங்கை நீரால் புனிதப்படுத்த வேண்டும் என்பதாலேயே அவா் அழைக்கப்படவில்லை என்று அவா் பேசியுள்ளது இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அவா் பேசியது பதவிப் பிரமாணத்தை அவமதிக்கும் செயலாகும். நாகரிகம் இல்லாமல், மத காழ்ப்புணா்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்ய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினையும், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT