திருப்பூர்

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிருடன் மீட்பு

DIN

பல்லடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

பல்லடம் பச்சாபாளையத்தைச் சோ்ந்தவா் மோகன்குமாா், ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி புனிதா. இவா்களது மகன் சுமன் (12), 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுமன் தனது நண்பா்களுடன் வீட்டுக்கு அருகே உள்ள மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளாா். அப்போது, தொலைந்த பந்தை எடுப்பதற்காக அங்கிருந்த புதா் பகுதிக்குச் சென்றுள்ளாா்.

அங்கு மூங்கில் தப்பை, சாக்கு பைகளால் மூடப்பட்டிருந்த கிணற்றில் எதிா்பாரத விதமாக சுமன் தவறி விழுந்துள்ளாா்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் தவித்த சிறுவனை பத்திரமாக மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT