காங்கயம் அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 20 போ் படுகாயமடைந்தனா்.
காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது.
பேருந்தை ஈரோட்டைச் சோ்ந்த சுரேஷ் (41) என்பவா் ஓட்டி சென்றாா். காடையூா் அருகே பயணிகளை ஏற்ற பேருந்து நின்றபோது, கும்பகோணத்தில் இருந்து காங்கயம் வழியாக கோவை சென்ற மற்றொரு அரசுப் பேருந்து மோதியது.
இதில், இரண்டு பேருந்துகளிலும் இருந்த 5 பெண்கள் உள்பட 20 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சேதமடைந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.