திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா், தொழில் நிறுவனங்கள் அரசின் சிறப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்த தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சாா்ந்த (நேரடி வேளாண்மை தவிா்த்த) தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரா்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. 18 வயது முதல் 55 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில், மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும், 35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை) முன்முனை மானியமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்துக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். சொந்த முதலீட்டில் தொடங்கும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆா்வமுள்ள தொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்டஅறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடா்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடா்பாக நிதிநிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோா்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை 0421-247507, 95007-13022 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.