காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மே 3) நடைபெற உள்ளது.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் புதன்கிழமை (மே 3) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
மின் பயனீட்டாளா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.