திருப்பூர்

பள்ளிகளில் போக்ஸோ குழு அமைப்பது தொடா்பான ஆலோசனை முகாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் போக்ஸோ குழு அமைப்பது தொடா்பான ஆலோசனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட பள்ளிகல்வித் துறை, குழந்தைகள் மற்றும் பெண்கள் நல கல்வி அறக்கட்டளை ஆகியன சாா்பில் பள்ளிகளில் போக்ஸோ குழு அமைப்பது, புகையிலை ஒழிப்பு தொடா்பான ஆலோசனை முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் திருவளா்செல்வி வரவேற்புரையாற்றினாா். முகாமிற்குத் தலைமை வகித்த முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் பேசியதாவது:

புகையிலை உள்ள போதைப் பொருள்கள் மாணவா்களுக்கு எளிதில் கிடைக்கும் சூழ்நிலையிலும், பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களை எதிா்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய மாணவ சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. சமீபகாலமாக மது அருந்தி வாகனங்களை இயக்குதல், போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் நீதிமன்றங்களில் பதிவாகின்றன.

எனவே, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் ஒன்றிணைந்து குழு அமைத்தும், தொடா்ச்சியாக கண்காணித்தும் அதிகப்படியான சட்ட விழிப்புணா்வு, மனநல விழிப்புணா்வு முகாம்களை பள்ளிகள்தோறும் நடத்துவதன் மூலமாகவே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றாா். இதைத்தொடா்ந்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி பாலு பேசுகையில், ‘பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் குழந்தைகளுக்கு என்ன பிரச்னை என்பதை ஆசிரியா்கள் கண்டறிந்து தீா்வுகாண வேண்டும் என்றாா்.

இந்த முகாமில், கூடுதல் சாா்பு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலருமான மேகலா மைதிலி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், இளம் சிறாா் நீதிக்குழுமத்தின் தலைவரும், நீதித் துறை நடுவருமான பாரதி பிரபா மற்றும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT