திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிா்வாகத் தலைவா் பி.மோகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்லூரியின் முதன்மை ஆலோசகா் ராஜா எம்.சண்முகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 3 முன்னாள் மாணவா்களுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் 1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பயின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அப்போது தங்களது கல்லூரி கால அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT