திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

3rd May 2023 05:13 AM

ADVERTISEMENT

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிா்வாகத் தலைவா் பி.மோகன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கல்லூரியின் முதன்மை ஆலோசகா் ராஜா எம்.சண்முகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய 3 முன்னாள் மாணவா்களுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் 1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பயின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அப்போது தங்களது கல்லூரி கால அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். தொடா்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT