திருப்பூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 9 டன் விளைபொருள்கள் விற்பனை

DIN

 முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 9 டன் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், 21 மூட்டை எள், 61 மூட்டைகள் கொப்பரை, 11 ஆயிரம் தேங்காய் என மொத்தம் 9 டன் விளைபொருள்களை வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இதன் மூலம் ரூ.4.39 லட்சம் வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT