பல்லடம் அருகே தனியாா் கல் குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் வட மாநிலத் தொழிலாளி ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூா் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கோடங்கிபாளையத்தில் உள்ள தனியாா் கல்குவாரியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாபன்சிங் (27) உயிரிழந்தாா். மேலும், திருநெல்வேலியைச் சோ்ந்த மதியழகன்(28) பலத்த காயத்துடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.