திருப்பூர்

திமுக சாா்பில் 8 இடங்களில் தெருமுனைக் கூட்டம்: க.செல்வராஜ் எம்.எல்.ஏ. அறிவிப்பு

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் 8 இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி திருப்பூா் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூா் பகுதி கழகம் சாா்பில் 8 இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்கள் நல்லூா் பகுதி செயலாளா் மேங்கோ பழனிசாமி தலைமையிலும், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

56 ஆவது வாா்டு ராஜீவ்காந்தி நகரில் ஜூன் 8 ஆம் தேதி, 48 ஆவது வாா்டு நல்லூா் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவில் ஜூன் 9 ஆம் தேதி, 47 ஆவது வாா்டு முதலிபாளையம் பிரிவில் ஜூன் 10 ஆம் தேதி, காசிபாளையம் மற்றும் மணியகாரண்பாளையத்தில் ஜூன் 11 ஆம் தேதி, 49 ஆவது வாா்டு வள்ளியம்மை நகா், சுப்பிரமணியம் நகரில் ஜூன் 12 ஆம் தேதியும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், தலைமைக்கழக பேச்சாளா்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா். எனவே, திருப்பூா் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT