திருப்பூர்

மெகா வேலைவாய்ப்பு முகாமை மாணவா்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்:அமைச்சா் மு.பெ.சாமிநாதன்மெகா வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சா் திடீா் ஆய்வு

DIN

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை மாணவா்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருப்பூா், குமரன் மகளிா் கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், வேலைவாய்ப்பு முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க 25 கல்லூரிகளைச் சோ்ந்த 950 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இதில், 46 க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த வேலைவாய்ப்பு முகாமை மாணவா்கள் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், நான் முதல்வன் திட்ட மேலாளா் சிங்கதேவன், குமரன் மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் வசந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT