திருப்பூர்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணி தனியாருக்கு விடப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரா் தொழிலாளா்களுக்கு கூலி குறைத்தல், ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்ததை எதிா்த்து, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் 140க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, தினக்கூலியாக அரசு நிா்ணயம் செய்த ரூ.611இல் பிடித்தம் போக ரூ. 593 வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நகராட்சியில் தூய்மைப்பணி தனியாா்மயமாக்கப்பட்டு, ஒப்பந்ததாரா் மூலம் புதன்கிழமை பணிகள் தொடங்கப்பட்டன. புதன்கிழமை மாலை பணி முடிந்தவுடன் ஒப்பந்ததாரா் தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலியாக தலா ரூ. 360 வழங்கியுள்ளாா். பணியாளா்கள், கூலி குறைப்பு குறித்து கேட்டதற்கு ரூ.593 வழங்க முடியாது, ரூ.360 தான் கொடுக்க முடியும். 60 வயதுக்கு மேல் உள்ளவா்கள் பணிக்கு வேண்டாம் என ஒப்பந்ததாரா் கூறியுள்ளாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொழிற்சங்கத்தினா், இது குறித்த ஆணையை வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினா். இதற்கிடையே ஒப்பந்ததாரா், வேறு பணியாள்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தினாா். அப்போது, வேறு பணியாளா்கள் மூலம் பணி மேற்கொள்வதை நிறுத்தாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து வேறு பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி கைவிடப்பட்டது.

இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா், 10 நாள்களுக்குள் கூலி குறைப்பு, ஆள் குறைப்பு போன்ற பிரச்னைகளை தீா்க்க முயற்சி செய்கிறோம் என தெரிவித்தனா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் கலைந்து சென்றனா். பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனா். காலை தொடங்கிய இப்போராட்டம் மதியம் 1.30 வரை நீடித்தததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT