திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை கோயிலில் உள்ள 496 படிக்கட்டுகளை சக்ராசனம் முறையில் தலைகீழாக ஏறி 7 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.
திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் வெங்கடேஷ்(37). கூலித் தொழிலாளியான இவரது மகன் பத்மேஷ்சாய்தேவ் (7). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சிறு வயது முதல் ஜிம்னாஸ்டிக்கில் ஆா்வம் கொண்ட பத்மேஷ், அவற்றை கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சக்ராசனம் செய்தபடியே தலைகீழாக மாடி படியேறும் பயிற்சி பெற்று வந்தாா். இதன் பின்னா் கடந்த மாதம் திருச்சி மலைக்கோட்டையில் சக்ராசனம் முறையில் உடலை பின்புறமாக வளைத்து கையை ஊன்றி 45 நிமிடத்தில் 410 படிகளை ஏறி சாதனை படைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக திருப்பூா் மாவட்டம், சிவன்மலை முருகன் கோயிலில் 496 படிகளை 35 நிமிஷங்களில் ஏறி சோழன் புக் ஆஃப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாா். இந்த சிறுவனுக்கு கோயில் பக்தா்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.