உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி, தாராபுரத்தில் புகையிலைப் பயன்பாட்டை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தாராபுரம் நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்தப் பேரணியை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தொடங்கிவைத்தாா். பேரணி நிறைவில், புகையிலை எதிா்ப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், பொன்னாபுரம் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் தேன்மொழி, மாவட்ட புகையிலை ஆலோசகா் மருத்துவா் சௌமியா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சௌந்தரராசு, சுகாதார ஆய்வாளா்கள் ராஜு, நவீன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்பாண்டி மற்றும் மகாராணி நா்ஸிங் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.