திருப்பூர்

பெருமாநல்லூா் கே.எம்.சி. பள்ளியில் ஆண்டு விழா

17th Jul 2023 12:18 AM

ADVERTISEMENT

 

அவிநாசி அருகே பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளியில் 15ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.சி. சண்முகம் தலைமை வகித்தாா். தாளாளா் சி.எஸ். மனோகரன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.எம். சின்னசாமி, கே.பி. இராமநாதன், அந்தோணிசாமி, அஸ்வின் சந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற சென்னை சிபிஎஸ்சி மண்டல அலுவலா் தினேஷ்ராம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம். சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பள்ளி முதல்வா் சீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தாா். இதைத் தொடா்ந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT