பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் வலுப்பூா் அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த கோவில் தோ்த் திருவிழா கடந்த 26ஆம் தேதி விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை அலகுமலை கைலாசநாதா் கோயில் பகுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.