திருப்பூர்

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் கைது

DIN

அவிநாசி பகுதியில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா், பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவா் கரூா் பெரிச்சிபாளையம் கோதூா் சாலையைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் (எ) ராஜா (42) என்பதும், தற்போது அவிநாசி பட்டறை பகுதியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் (எ) ராஜாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT