திருப்பூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ வட்டக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் கே.மணிகண்டன் (33). இவரது மனைவி சுஜாதா (28). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இருவரும் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
இதனிடையே, சுஜாதாவின் நடத்தையில் மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை காலையும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சுஜாதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினா், சுஜாதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், மனைவியை கொலை செய்த மணிகண்டனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.