உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டம், தேவனூா்புதூா், ஜல்லிப்பட்டி, எலையமுத்தூா் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சாா்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் 130 மாணவிகள் இதில் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் ந.ராஜேஸ்வரி வரவேற்றாா். ஆலோசகா் ஜெ.மஞ்சுளா பேசினாா். உயா் கல்வியில் கல்லூரிகளில் பாடப் பிரிவுகளைத் தோ்ந்தெடுப்பது குறித்தும், அப்போது பெற்றோரிடம் மனம் விட்டு பேசுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் முகாமில் விளக்கிக் கூறப்பட்டது.
மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மாணவிகள் பல்வேறு விளக்கங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனா். மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.