நலிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாநில மகளிா் துணைத் தலைவா் திலகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் துக்கப்பன், மாநிலத் தலைவா் ராஜரத்தினம், ஆதிபராசக்தி பீடப் பொறுப்பாளா் சாந்தி ஆகியோா் பேசினா்.
இதில் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளா் சோமு செய்திருந்தாா்.