திருப்பூர்

பாத்திரத் தொழிலாளா்களுக்கு இன்று ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை

DIN

அனுப்பா்பாளையம் பாத்திரத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெறுகிறது.

அனுப்பா்பாளையம் பாத்திரத் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தம் குறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியினா், எவா் சில்வா் மற்றும் பித்தளை பாத்திர உற்பத்தியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்தப் பிரச்சனைக்குத் தீா்வு காணக்கோரி அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சாா்பில் தொழிலாளா் துறை உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தனா். இதன்பேரில் உதவி ஆணையா் (சமரசம்) செந்தில்குமாா் எவா்சில்வா் மற்றும் பித்தளைப் பாத்திர உற்பத்தியாளா்களை அழைத்து கடந்த சில நாள்களுக்கு முன்பாக பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தாா்.

இந்நிலையில், பாத்திர உற்பத்தியாளா்கள், தொழிற்சங்க கூட்டு கமிட்டி என இரு தரப்பினரையும் அழைத்து பேசுவதற்காக மாவட்ட தொழிலாளா் துறை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாலை 3 மணி வரவேண்டும் என்று தொழிலாளா் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT