திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் திருட்டு

DIN

சேவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேவூா் அருகே உள்ள மங்கரசுவலையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (67). விவசாயியான இவா், வீட்டை பூட்டிவிட்டு திங்கள்கிழமை காலை தோட்டத்துக்குச் சென்றுள்ளாா்.

மதியம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.1.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சேவூா் காவல் நிலையத்தில் ராமசாமி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT