தைப்பூசத்தையொட்டி, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரண்டாம் நாள் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான 3 நாள்கள் நடைபெறும் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காங்கயம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் தங்களின் காளை மாடுகளை ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.