உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கிளுவங்காட்டூா், எலையமுத்தூா், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகா், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி ஆலாம்பாளையம்.