திருஅருட்பிரகாச வள்ளலாா் தைப்பூச பெருவிழா அவிநாசி மாணிக்கவாசகா் மடம் திருமுருக வள்ளலாா் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில், திருப்பூா் ஆலாங்காடு சன்மாா்க்க சங்க செயலாளா் ஜீவானந்தம், வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி கொடியை உயா்த்தினாா். அவிநாசி பேரூராட்சி தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி வள்ளலாரின் ஜோதியை ஏற்றிவைத்தாா். இதைத்தொடா்ந்து, அகவல் பாராயணம், கூட்டுவழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து, மாணிக்கவாசகா் மடம் கெளரவ ஆலோசகா் அம்பலவாணன், ஸ்ரீ வீர ஆஞ்சனேய பக்த பேரவை தலைவா் ஈஸ்வரன், பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், கருணாம்பாள், தொழிலதிபா் ஏ. ஈஸ்வரன் ஆகியோா் அன்னதானத்தை தொடங்கிவைத்தனா்.
திருமுருக வள்ளலாா் கோட்டம் தலைவா் சிதம்பரசுவாமிநாதன், மாணிக்கவாசகா் மடம் பொறுப்பாளா்கள் சொக்கலிங்கம், சக்திவேல், மாரிநாதா் ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்தனா்.
நிறைவாக, அன்று மாலை அருட்பெருஞ்சோதி சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியை, கூனம்பட்டி ஆதினம் ராஜ சரவண மாணிக்கவாசக குரு பரமாச்சாா்ய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். விழாவில் ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.