திருப்பூர்

மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

DIN

சேவூா் அருகே உள்ள மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும், ‘மேல திருப்பதி’ எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தை தோ்த் திருவிழா ஜனவரி 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து தினமும் சிறப்புப் பூஜைகள், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்றது. பகல் 11 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ‘கோவிந்தா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். மதியம் 2.30 மணிக்கு தோ் நிலையை அடைந்தது.

இதையடுத்து, பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சிகள் சனிக்கிழமையும், சேஷ வாகனத்தில் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை காலையும் இரவு தெப்பத்தோ் திருவிழாவும் நடைபெறுகின்றன.

மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடியிறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனையுடன் திங்கள்கிழமை விழா நிறைவடைகிறது.

தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா.சங்கரசுந்தரேஸ்வரன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் மா.ராமமூா்த்தி, அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT