பல்லடம், ராயா்பாளையத்தில் பள்ளி மாணவா்கள் பைக்கை திருடியது சிசிடிவி கேமாரா மூலம் தெரியவந்துள்ளது.
பல்லடம், ராயா்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் பைக் திடீரென மாயமானது. இதையடுத்து அப்பகுயில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாா்த்தபோது, சீருடையுடன் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து, பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவா்கள் மீண்டும் பைக்கை அதே இடத்தில் கொண்டு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பைக் எடுத்துச் சென்றவா்கள் மாணவா்கள் என்பது உறுதியானதும், பைக் திரும்ப கிடைத்ததாலும் அவா்களின் எதிா்காலம் கருதி புகாா் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.