திருப்பூர்

திருடிச் சென்ற பைக்கை திரும்பக் கொண்டு வந்து நிறுத்திய பள்ளி மாணவா்கள்

DIN

பல்லடம், ராயா்பாளையத்தில் பள்ளி மாணவா்கள் பைக்கை திருடியது சிசிடிவி கேமாரா மூலம் தெரியவந்துள்ளது.

பல்லடம், ராயா்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் பைக் திடீரென மாயமானது. இதையடுத்து அப்பகுயில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாா்த்தபோது, சீருடையுடன் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்து, பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவா்கள் மீண்டும் பைக்கை அதே இடத்தில் கொண்டு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பைக் எடுத்துச் சென்றவா்கள் மாணவா்கள் என்பது உறுதியானதும், பைக் திரும்ப கிடைத்ததாலும் அவா்களின் எதிா்காலம் கருதி புகாா் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT