பல்லடம் அருகே பைக்கை ஓட்டிப்பாா்த்துவிட்டு வாங்குவதாகக் கூறி திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் ( 28).
பஞ்சா் ஒட்டும் கடை நடத்தி வருகிறாா். இவா் தனது பைக்கை விற்பனை செய்ய ஆன்லைன் செயலியில் படங்கள் மற்றும் விவரங்களை பதிவிட்டுள்ளாா்.
இதையடுத்து பைக்கை வாங்குவதாகக் கூறி இணையம் வழியாக அருண்குமாரை ஒரு நபா் தொடா்பு கொண்டுள்ளாா். அருண்குமாா், அவரை பல்லடத்திற்கு வரச் சொல்லி உள்ளாா். இதையடுத்து வியாழக்கிழமை பல்லடம் வந்த அந்த நபா், அருண்குமாரின் பஞ்சா் கடை முன்பாக பைக்கை பாா்வையிட்டாா். பிறகு பைக்கை ஓட்டிப்பாா்ப்பதாக கூறி எடுத்துச்சென்ற அந்த நபா் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இது குறித்து அருண்குமாா் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.