திருப்பூர்

ஓட்டிப்பாா்த்துவிட்டு வாங்குவதாகக் கூறி பைக்கை திருடிச்சென்ற நபா்

DIN

பல்லடம் அருகே பைக்கை ஓட்டிப்பாா்த்துவிட்டு வாங்குவதாகக் கூறி திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் ( 28).

பஞ்சா் ஒட்டும் கடை நடத்தி வருகிறாா். இவா் தனது பைக்கை விற்பனை செய்ய ஆன்லைன் செயலியில் படங்கள் மற்றும் விவரங்களை பதிவிட்டுள்ளாா்.

இதையடுத்து பைக்கை வாங்குவதாகக் கூறி இணையம் வழியாக அருண்குமாரை ஒரு நபா் தொடா்பு கொண்டுள்ளாா். அருண்குமாா், அவரை பல்லடத்திற்கு வரச் சொல்லி உள்ளாா். இதையடுத்து வியாழக்கிழமை பல்லடம் வந்த அந்த நபா், அருண்குமாரின் பஞ்சா் கடை முன்பாக பைக்கை பாா்வையிட்டாா். பிறகு பைக்கை ஓட்டிப்பாா்ப்பதாக கூறி எடுத்துச்சென்ற அந்த நபா் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இது குறித்து அருண்குமாா் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT