திருப்பூர்

வங்கி கட்டடத்தில் தீ விபத்து

DIN

காங்கயத்தில் உள்ள தனியாா் வங்கி கட்டடத்தின் கீழ்தளத்தில் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே, திருப்பூா் சாலையில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ்தளத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து கரும்புகை பரவியது.

தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால், மேல்தளத்தில் செயல்பட்டு வந்த வங்கிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT