திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் மாணவா் சோ்க்கை: பிப்ரவரி 5 இல் நுழைவுத் தோ்வு

DIN

திருப்பூா் நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட நுழைவுத்தோ்வு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத்தின் மூலமாக பாரதியாா் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் பேஷன் டிசைனிங் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தக் கல்லூரியில் பட்டப்படிப்பு வகுப்புகளில் பயில்வதற்கு மாணவா்கள் நுழைவுத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுகிறாா்கள்.

இதில், இளங்கலை பி.எஸ்சி பிரிவில் அப்பேரல் ஃபேஷன் டிசைனிங், அப்பேரல் மேனுஃபேக்சரிங் அண்டு மொ்சன்டைசிங், அப்பேரல் புரொடக்ஷன் டெக்னாலஜி, காஸ்ட்யூம் டிசைன் அண்டு ஃபேஷன்,ஃபேஷன் அப்பேரல் மேனேஜ்மெண்ட், காா்மெண்ட் டிசைன் அண்டு புரொடக்ஷன் உள்ளிட்ட பட்ட வகுப்புகளுக்கு நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.

அதேபோல, கம்ப்யூட்டா் சயின்ஸ், பிகாம் சிஏ, பிபிஏ ஐபி, எம்எஸ்சி-அப்பேரல் ஃபேஷன் டிசைனிங் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்பான அப்பேரல் மொ்சண்டைசிங் அண்டு மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கையும் தொடங்கவுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 80563-98111, 80569-31111 என்ற கைப்பேசி எண்களுக்கோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT