திருப்பூர்

தருமபுரி ஆட்சியரின் பெற்றோரிடம் நகை பணம் கொள்ளை

DIN

அவிநாசி அருகே லூா்துபுரத்தில் உள்ள தருமபுரி மாவட்ட ஆட்சியரின் பெற்றோா் வீட்டில் புகுந்த இரு நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 7 பவுன் நகை, ரூ.7000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே மங்கரசுவளையபாளையம் ஊராட்சி, லூா்துபுரம் பிள்ளையாா் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (86). இவரது மனைவி சரஸ்வதி (78). இவா்கள் இருவரும் தனியாக தோட்டத்தில் வசித்து வருகின்றனா்.

இவா்களது மகன் ரமேஷ்குமாா் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். மூத்த மகள் ராதாலட்சுமி கோவை, துடியலூா் அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும், இளைய மகள் சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் உள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கிருஷ்ணசாமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த இரு நபா்கள், கிருஷ்ணசாமியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் சுத்தியால் கையில் தாக்கியுள்ளனா். பிறகு சரஸ்வதியை சேலையால் கட்டிப் போட்டு மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து அவா் அணிந்திருந்த 7 பவுன் நகைகள், ரூ.7000 ரொக்கம் ஆகியவற்றை அந்த நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT