வெள்ளக்கோவில் ஸ்ரீவீரக்குமார சுவாமி கோயிலில் தோ் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் 140 ஆவது ஆண்டு மாசி மஹா சிவராத்திரி தோ்த் திருவிழா வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முகூா்த்தக் கால் நடப்பட்டு திருவிழா பணிகள் முறைப்படி துவக்கிவைக்கப்பட்டன.
மலா்களால் அலங்கரிக்கப்பட்ட முகூா்த்தக் காலை மேளதாளங்கள் முழங்க பக்தா்களால் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வர எடுத்து வரப்பட்டு தேரில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் ராமநாதன், கோயில் குலத்தவா்கள் கலந்து கொண்டனா்.