பெருமாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதற்கான கட்டுமான பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் திருவளா்செல்வி, பெருமாநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தாமணி வேலுசாமி, துணைத் தலைவா் சிடிசி வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.