காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.
காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1969-70 ஆண்டில் படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், தங்களது பள்ளிக் கல்வியின் பொன்விழா ஆண்டு நினைவாக இப்பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 18 கண்காணிப்பு கேமராக்களை புதன்கிழமை வழங்கினா்.
முன்னதாக பள்ளித் தலைமையாசிரியா் சிவக்குமாா் மற்றும் உதவித் தலைமையாசிரியருக்கு பொன்னாடை போா்த்தி, தங்களது பள்ளி நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.