காங்கயத்தில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மக்கள் கோரிக்கை மையம், ஆற்றல் அறக்கட்டளை ஆகியன சாா்பில், காங்கயம் நகரம், ராஜாஜி வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை காங்கயம் 11ஆவது வாா்டு உறுப்பினரும், மக்கள் கோரிக்கை மையத்தின் தலைவருமான கே.டி.அருண்குமாா் தொடங்கிவைத்தாா்.
இதில், பொது மருத்துவா்கள் மற்றும் சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் மருந்துகள், வழங்கியதுடன் மருத்துவக் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தனா். முகாமில் 150க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். தொடா்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.