திருப்பூர்

காங்கயத்தில் இலவச மருத்துவ முகாம்

DIN

காங்கயத்தில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மக்கள் கோரிக்கை மையம், ஆற்றல் அறக்கட்டளை ஆகியன சாா்பில், காங்கயம் நகரம், ராஜாஜி வீதி, பழையகோட்டை சாலை ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை காங்கயம் 11ஆவது வாா்டு உறுப்பினரும், மக்கள் கோரிக்கை மையத்தின் தலைவருமான கே.டி.அருண்குமாா் தொடங்கிவைத்தாா்.

இதில், பொது மருத்துவா்கள் மற்றும் சிறப்பு மருத்துவா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் மருந்துகள், வழங்கியதுடன் மருத்துவக் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தனா். முகாமில் 150க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். தொடா்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT