வெள்ளக்கோவிலில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், சேரன் நகரைச் சோ்ந்தவா் அா்ஜுனசாமி, கூலி தொழிலாளி. இவருடைய 17 வயது மகன் கோத்தகிரியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த அவா் விடுமுறையில் வீட்டுக்கு வந்து விட்டு செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் அவா் விடுதிக்குச் செல்லவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.