காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி1) நடைபெறவுள்ளது.
இது குறித்து மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளா் வெ.கணேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இம்மாதத்துக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 1) காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெற உள்ளது.
மின் பயனீட்டாளா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.