வெள்ளக்கோவில் அருகே சிறுவனை திருமணம் செய்த பெண் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை தாசவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி (21). இவா் தாராபுரம் சாலை சேரன் நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டாா். சிறுவனைக் காணவில்லை என பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில் கிடைத்த தகவல் அடிப்படையில் சிறுவனையும், சாந்தியையும் போலீஸாா் கண்டுப்பிடித்தனா். பின்னா் சாந்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.