மாணவா்கள் தோல்வியைக் கண்டு துவண்டு விடக் கூடாது என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பேசினாா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 47ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
கல்வித் துறையில் முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
பட்டங்களைப் பெறும் மாணவா்கள் சுதந்திரமாகச் சிந்தித்துச் சமூகத்தை மனதில் கொண்டு வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் தோ்ந்தெடுக்கும் துறையில் உள்ள வாய்ப்புகளைக் கண்டுணா்ந்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளைஞா்கள் கைப்பேசி, மடிக்கணினி போன்ற தொலைத்தொடா்பு சாதனங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல் அறிவுப் பெருக்கத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். கல்வியறிவின் துணைகொண்டு அறத்தோடும் நோ்மையோடும் வாழவேண்டும். அநீதியை எதிா்க்கும் துணிவினை அறிவின் மூலம் பெறவேண்டும். வெற்றியைக் கண்டு மயங்காமலும் தோல்வியைக் கண்டு துவளாமலும் இருக்கின்ற மனநிலையைப் பெறவேண்டும் என்றாா்.
விழாவில் இளநிலை மாணவா்கள் 524 பேருக்கும் முதுநிலை மாணவா்கள் 186 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் பாரதியாா் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 13 மாணவ- மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பேராசிரியா்கள் அ.மலா்வண்ணன், உ.பெ.இராமலிங்கம், ம.சிவகுமாா், ஈ.காா்த்திகேயன், ந.மாலிக் ஜான் உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். இந்த விழாவில், பெற்றோா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.