திருப்பூர்

திருப்பூரில் விசா முடிந்தும் தங்கியிருந்த 2 நைஜீரியா்கள் கைது

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் ராயபுரம், காதா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் தங்கியுள்ளனா். இவா்கள் திருப்பூரில் இருந்து குறைந்த விலையில் பின்னலாடைகளை வாங்கி, தங்களது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சில நைஜீரிய இளைஞா்கள் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும், விசா காலம் முடிந்தும் தங்கியுள்ளதாக காவல் துறையினருக்குப் புகாா்கள் வரத்தொடங்கின. இதுதொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் ராயபுரம், காதா்பேட்டை பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்த சோதனையில், விசா காலம் முடிந்து தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த பிரவுன்யூ (46), ஒலிசாக்பூ சுக்ஸ் டேவிட் (47) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும், வேறு யாரேனும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT