திருப்பூர்

சேவூரில் பனியன் கழிவு கிடங்கில் தீ:பல லட்சம் பொருள்கள் சேதம்

DIN

சேவூரில் பனியன் கழிவு கிடங்கில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

சேவூா் புளியம்பட்டி சாலை சந்தையப்பாளையம் பகுதியில், நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பனியன் கழிவுக் கிடங்கு உள்ளது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து அங்கு வந்த சேவூா் போலீஸாா், அவிநாசி தீயணைப்புத் துறையினா், தீயை அணைக்க முயன்றனா்.

எனினும் தீ அதிவேகமாக பரவியதையடுத்து, மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனா். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தும், உள்ளிருந்த இயந்திரங்கள், பனியன் கழிவு உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இதுகுறித்து சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT