திருப்பூர்

ரூ.75 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

DIN

தாராபுரம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான 5.20 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள நாட்டாா்மங்கலத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக தட்டாரவலசு கிராமத்தில் இருந்த 5.20 ஏக்கா் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இது குறித்து திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரதுரை, உதவி ஆணையா் செல்வராஜ், தனி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், ஆய்வாளா் சுமதி, தக்காா் திலகவதி ஆகியோா் ஆக்கிரமிப்புதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதன் பேரில் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்று ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து சுவாதீனம் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளதுடன், நில அளவீடு செய்யப்பட்டு அறநிலையத் துறை பெயா் பொறித்த எல்லைக் கற்களும் நடப்பட்டன. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.75 லட்சம் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT