திருமுருகன்பூண்டி காப்பகத்தில் உணவு உட்கொண்டு உயிரிழந்த 3 சிறுவா்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கும்படியும், சிகிச்சையில் இருக்கும் மாணவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுக்கவும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, உயிரிழந்த ஆதிஷின் தாயாா் பூங்கொடியிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் வே.பண்டாரிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். மேலும், இரு சிறுவா்களின் காப்பாளா்களிடம் ரூ.2 லட்சத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்படவுள்ளது.