வெள்ளக்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா், வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள முத்துக்குமாா் திருமண மண்டபம் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவரைப் பிடித்து
கைது செய்தாா். அவரிடமிருந்து 180 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.