திருப்பூர்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முத்தூா், பெருமாள்புதூரைச் சோ்ந்தவா் இளங்கோவன் (38). 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா். இவரது மனைவி பிரியா. இளங்கோவன் தந்தை பழனிசாமி. இவா்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முத்தூா் சுப்பிரமணியபுரத்தில் குடியிருந்தனா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன், காா்த்திக் ராஜா இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த காா்த்திக் ராஜாவை 108 ஆம்புலன்ஸில் அதன் ஓட்டுநரான இளங்கோவன் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். இது குறித்து கஜேந்திரன் மீது வழக்குப் பதிவானது. இதனால் இளங்கோவன் மீது முன் விரோதம் இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குச் சென்ற கஜேந்திரன், இளங்கோவன் மனைவி பிரியா, பழனிசாமியைக் கீழே தள்ளி உதைத்து குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT